செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கும் அமலாபால்…!

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கும் அமலாபால்…!

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கும் அமலாபால்…! post thumbnail image
அமலாபாலுக்கும் மற்றும் டைரக்டர் விஜய்க்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. வெளிநாட்டில் தேனிலவை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர். திருமணத்துக்கு முன்பே தனுசுடன் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’, ‘‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’’ படங்களை முடித்துக் கொடுத்துவிட்டார்.

தற்போது, மிலி, லைலா ஓ லைலா ஆகிய இரு மலையாள படங்களில் நடிக்க உள்ளார். இதுகுறித்து அமலாபால் கூறியதாவது:–

மிலி, லைலா ஓ லைலா படங்களில் நடிக்க உள்ளேன். மிலி படத்தில் நான் ஆசைப்பட்ட எனது கனவு கேரக்டர் அமைந்துள்ளது. இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அடுத்து மோகன்லாலுடன் லைலா ஓ லைலா படத்தில் நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்குகிறது. ஜோஷி இப்படத்தை இயக்குகிறார். அவர் திறமையான டைரக்டர்.

தனுசுடன் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் விரைவில் வருகிறது. தனுஷ் சிறந்த நடிகர். அவருடன் நடித்தது இனிய அனுபவமாக இருந்தது. நடிக்கும்போது எங்களுக்குள் போட்டியே இருந்தது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி