தனது மனைவிக்கு வேலை கிடைத்துள்ளது என்று கூறி அந்த வாலிபர் அவரை கடந்த 4ம் தேதி போபாலுக்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியிலே தனது சகோதரனின் வீட்டில் தனது குழந்தையை விட்டுவிட்டு சென்றுள்ளான். பின்னர் ராஜ்காருக்கு மனைவியை மட்டும் அழைத்து சென்று அங்குள்ள புரோக்கரிடம் பெண்ணை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்றுவிட்டு அவருக்கு தெரியாமல் ஓடி வந்துள்ளான்.
பின்னர் புரோக்கர் அரவிந்த் அந்த பெண்ணை திலீப் என்பவருக்கு விற்றுள்ளான். அவன், அவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளான். போலீசார் விசாரித்து பெண்ணை அங்கு இருந்து மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைத்தார். மேலும், பெண்ணை கடத்தியது தொடர்பாக 3 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி