செய்திகள் தாய்லாந்தில் போக்குவரத்தை நிறுத்திய 1 லட்சம் வாத்துகள்!…

தாய்லாந்தில் போக்குவரத்தை நிறுத்திய 1 லட்சம் வாத்துகள்!…

தாய்லாந்தில் போக்குவரத்தை நிறுத்திய 1 லட்சம் வாத்துகள்!… post thumbnail image
பேங்காக்:-மேற்கு தாய்லாந்தில் கூட்டமாக வந்த சுமார் ஒரு லட்சம் வாத்துகள் சாலை போக்குவரத்தை தடை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நக்கான் பத்தம் வழியாக வழக்கம் போல் தனது காரில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பக்கவாட்டில் இருந்த வயல்வெளியில் இருந்து சில வாத்துகள் சாலை மீது ஏறி மெல்ல நடக்க தொடங்கின.

சற்று நேரத்துக்குள் சாலையில் சுமார் ஒரு லட்சம் வாத்துகள் குவிந்து விட, அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நின்றுவிட நேரிட்டது. மெல்ல நகர்ந்து சென்ற வாத்துகள் ஒரு கட்டத்தில் ‘டிராபிக் சிக்னல்’ போட்டு நிறுத்தியது போல் திடீரென்று சில நிமிடங்களுக்கு அப்படியே நின்று விட்டன.இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்த ஒருவர், அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த காட்சி பல பகிர்வுகளுடன் இனையத்தில் ‘சக்கைப்போடு’ போட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி