அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!…

ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!…

ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!… post thumbnail image
புதுடெல்லி:-ஈராக் உள்நாட்டு போர் காரணமாக பாக்தாத் நகரில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.குறிப்பாக தீவிரவாதிகளின் பிடியில் உள்ள திர்கித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்தியர்களும் நிராதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் குறித்த தகவலை, அவர்களின் குடும்பத்தினர் அறிந்துகொள்வதற்கு வசதியாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்றை மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.இந்த அறையின் தொலைபேசி எண்களான +91 11 2301 2113, +91 11 2301 7905, +91 11 2301 4104 ஆகியவற்றில், இது தொடர்பாக தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசிக்கும் 10 ஆயிரம் இந்தியர்களுக்கு உதவி செய்வதற்காக ஏற்கனவே 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ‘ஹெல்ப்லைன்’ சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி