அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி!…

வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி!…

வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி!… post thumbnail image
புதுடெல்லி:-நாட்டின் 15வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி நடந்து முடிந்த தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உ.பி.யில் உள்ள வாரணாசி ஆகிய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஒருவர் ஒரு பதவிக்குமேல் வகிக்கக்கூடாது என்பதால் அவர் ஒரு தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அந்த தொகுதி எது என்று மக்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் மோடி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார். ஒருவர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்ற 14 நாட்களில் ஒரு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி