செய்திகள்,திரையுலகம் காதல் மலர்ந்தது எப்படி என விஜய், அமலாபால் பேட்டி!…

காதல் மலர்ந்தது எப்படி என விஜய், அமலாபால் பேட்டி!…

காதல் மலர்ந்தது எப்படி என விஜய், அமலாபால் பேட்டி!… post thumbnail image
சென்னை:-விஜய் இயக்கிய ‘தெய்வதிருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.

சாந்தோம் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளது. திருமணம் குறித்து விஜய், அமலாபால் இருவரும் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது, விஜய் கூறும்போது,”அமலாபாலும் நானும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம்.

எங்களுக்குள் ஆரம்பத்தில் காதல் இல்லை.ஆனால் பத்திரிகைகளில் எங்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின. அதன்பிறகுதான் காதல் வயப்பட்டோம்”. என்றார்.அமலாபால் கூறும்போது, ‘‘திருமணத்துக்கு பிறகு நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி