அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!

ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….!

ராயப்பேட்டையில் கலைஞரின் 91-வது பிறந்தநாள் விழா….! post thumbnail image
சென்னை :- ஜூன் 3–ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள், கழக முன்னணியினர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.

பகுதி செயலாளர்கள் எஸ்.மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் ஆகியோர் வரவேற்புரையாற்றுகிறார்கள். பகுதி கழக செயலாளர் மா.பா.அன்புதுரை நன்றி கூறுகிறார். இவ்வாறு தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி