அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மோடியை அழைத்த சீன அரசு …!

மோடியை அழைத்த சீன அரசு …!

மோடியை அழைத்த சீன அரசு …! post thumbnail image
பீஜிங் :- நாட்டின் பிரதராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு சீனா இன்று முறைப்படி வாழ்த்து தெரிவித்ததுடன் அந்நாட்டிற்கு வருமாறு அழைத்துள்ளது. அங்குள்ள இந்திய தூதரான அசோக் கே காந்தாவிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கியுள்ளார்.

இரு நாட்டு உறவுகளை விரிவாக்கம் செய்யும் நோக்கிலேயே சீனா மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. எனினும் அக்கடிதத்தில் என்ன உள்ளது என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. மே 26ந் தேதி மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அந்நாட்டு அதிபர் அவருக்கு முறைப்படி அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

தேர்தலில் மோடி வெற்றி பெற்றவுடன் கடந்த 17ந் தேதியன்று அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான ஹுவா சுன்யிங் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி