செய்திகள்,திரையுலகம் 4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!…

4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!…

4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!… post thumbnail image
சென்னை:-சரத்குமார் கடைசியாக ஹீரோவாக நடித்த படம் ‘ஜக்குபாய்’. அதன் பிறகு காஞ்சனா, சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில், கொல கொலையா முந்திரிக்கா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம்.

சரத்குமாருடன் இணைந்து அவர் மனைவி ராதிகாக சரத்குமார் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபன் ஆகியோர் இதனை தயாரிக்கிறார்கள்.இந்தப் படத்தின் கதையை சரத்குமார் எழுதியுள்ளார். திரைக்கதை வசனத்தை ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, கன்னட நடிகர் அருண்சாகர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

புயல், சூறாவளியை தாண்டி அசுரவேகத்தில் வீசும் காற்றை சண்டமாருதம் என்று குறிப்பிடுவார்கள். படத்தில் சரத்குமாருக்கு அப்படி ஒரு கேரக்டர். வில்லன் கேரக்டரும் படு பயங்கரமாக இருக்கும். பக்கா ஆக்ஷன் படம். ஆனால் இதுவரை யாரும் சொல்லப்படாத கதை களத்தில் சொல்லப்படாத கதையை சொல்லப்போகிறோம். எதிரியை பார்த்து பழக்கமில்லை எரிச்சுதான் பழக்கம் என்பது வில்லன் சரத்குமாரின் பாலிசி. எதிரியை எரிப்பது மட்டுமல்ல சாம்பாலாக்கித்தான் பழக்கம் என்பது ஹீரோ சரத்குமாரின் பாலிசி. இவர்கள் இருவரின் மோதல்தான் சண்டமாருதம். என்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி