செய்திகள் புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தல்!…

புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தல்!…

புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தல்!… post thumbnail image
கொழும்பு:-மும்பையில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். தனது வலது கையில் தாமரை மலரில் புத்தர் அமர்ந்திருப்பது போன்ற உருவப் படத்தை அவர் பச்சை குத்தியிருந்தார்.

இது புத்தமத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நீர்க்கொழும்பு நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நாடு கடத்துவதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி