அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!…

ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!…

ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!… post thumbnail image
நியூடெல்லி:-கடந்த 2009ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட ப.சிதம்பரம், திமுக கூட்டணியின் ஆதரவு இருந்தும் மிகுந்த சிரமப்பட்டுதான் வெற்றி பெற்றார். அவரது வெற்றியில் மர்மம் இருப்பதாக இன்னும் கூட அந்த பகுதியில் பேச்சு நடமாடுகிறது.

இந்நிலையில் எவ்வித கூட்டணியும் இன்றி தனித்து நின்றால் தனது தோல்வி நிச்சயம் என்று கருதிய ப.சிதம்பரம், இம்முறை தனக்கு சிவகங்கை தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தனக்கு பதிலாக தனது மகனுக்கு சிவகங்கையில் சீட் கொடுக்குமாறு காங்கிரஸ் தலைமையிடம் கேட்டுள்ளார். தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ப.சிதம்பரத்தின் நடவடிக்கை காங்கிரஸ் தலைமைக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. இத்தனை வருடங்கள் எம்.பியாக இருந்தும், சொந்த தொகுதியில் நிற்க அச்சப்படும் ப.சிதம்பரம் மீது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் உள்ளனர். சிவகங்கையில் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை என்றால் வேறு எந்த வாய்ப்பும் அவருக்கு கொடுக்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி