செய்திகள்,விளையாட்டு ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?…

ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?…

ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?… post thumbnail image
மும்பை:-ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை போல டென்னிசிலும் சர்வதேச பிரீமியர் லீக் (ஐபிடிஎல்) போட்டிகளை நடத்த இந்தியாவின் மகேஷ் பூபதி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இத்தொடரை நடத்துவதற்காக அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. போட்டிகள் இந்தாண்டு நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை பாங்காக், கோலாலம்பூர், மும்பை, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வீரர்கள் ஏலம் மார்ச் 2ம் தேதி துபாயில் நடத்தப்படுகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படுவார்கள். ஆண்கள் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, உலகின் 2ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போட்டி விதிமுறைகள், அணிகள் விபரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர்-1 வீரரான ஸ்பெயினின் ரபெல் நடாலும் ஐபிடிஎல்லில் விளையாட உள்ளார். இவருக்கு ஒரு நாள் இரவுக்கு, அதாவது 2, 3 மணி நேரம் நடக்கும் ஒரு போட்டிக்கு ரூ.6.2 கோடி வரை சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள். 27 வயதாகும் நடால் 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். நடால் இவ்வருடம் மட்டும் விளையாட்டின் மூலம் கிட்டத்தட்ட 66 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்து பரிசுத்தொகை மூலம் அதிக வருமானம் பெறும் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அனுபவ வீரர் ரோஜர் பெடரர் 66 மில்லியன் டாலருடன் முதலிடத்திலும் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் 30 மில்லியன் டாலருடன் ஆறாம் இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் பல்கேரியாவின் விக்டோரியா அசரன்கா, நெதர்லாந்தின் கரோலின் வோஸ்னியாக்கி, போலந்தின் ரத்வன்ஸ்கா ஆகியோரும் இத்தொடரில் விளையாட உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி