செய்திகள்,திரையுலகம் எனது அனைத்து படங்களுக்கும் இனி நயன்தாராதான் ஹீரோயின் – உதயநிதியின் முடிவு…

எனது அனைத்து படங்களுக்கும் இனி நயன்தாராதான் ஹீரோயின் – உதயநிதியின் முடிவு…

எனது அனைத்து படங்களுக்கும் இனி நயன்தாராதான் ஹீரோயின் – உதயநிதியின் முடிவு… post thumbnail image
சென்னை:-நான் முதன்முதலில் தயாரித்த குருவி படத்திற்கு நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால் அவர் அப்போது பிசியாக இருந்ததால் அந்த படத்துக்கு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தோம்.

அதன் பின்னர் எங்களது இரண்டாவது படைப்பு ஆதவன் படத்தில் நயன்தாரா மறுக்காமல் நடித்துக்கொடுத்தார்.அதில் ஒரு சிறிய வேடத்தில் நானும் நடித்திருப்பேன். நான் கதாநாயகனாக நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கும் நயன்தாராவைத்தான் முதலில் அணுகினோம். ஆனால் அவர் அப்போதைய சூழ்நிலையில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறிவிட்டதால், ஹன்சிகாவை நடிக்க வைத்தோம்.

தற்போது எனது இரண்டாவது படத்தில் அவரை நடிக்க அழைத்தபோது மறுப்பு ஏது சொல்லாமல் ஒப்புக்கொண்டார். என்னுடைய முதல் பிரியமான பத்து நபர்களில் நயன்தாராவும் ஒருவர். இனிவரும் படங்களிலும், அவர் மறுத்தால் மட்டுமே வேறு கதாநாயகி குறித்து பரிசீலனை செய்வோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி