செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு காரைக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை …

காரைக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை …

காரைக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை … post thumbnail image
சிவகங்கை:-தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் மும்பையில் நடைபெற்றது.இதில் 27 மாநிலத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டில் இருந்து 23 மாவட்டங்களை சேர்ந்த 16 பேர் கலந்து கொண்டனர்.இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 63 முதல் 68 கிலோ வரை எடையுள்ளவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் காரைக்குடி மகரிஷி பள்ளி மாணவர் ரவீந்தர் முதலிடம் பிடித்து தங்கபதக்கம் பெற்றார். 68ல் இருந்து 72 கிலோவரை எடையுள்ளவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் இதே பள்ளி மாணவர் ரமேஷ் வெள்ளி பதக்கம் பெற்றார். கொரியாவில் ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள சர்வதேச இவர்கள் இருவரும் தேர்வாகியுள்ளனர்.

இதே போல் தஞ்சையில் மாநில அளவிலான சைக்கிள்போட்டிகள் கடந்த 29-ந்தேதி நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இதே பள்ளி மாணவி பவித்ரா மாநில அளவில் 2ம் இடம் பெற்றார். இதையொட்டி அவர்களை மாவட்ட கலெக்டர் ராஜாராமன், போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் முகுந்த் கோட்னிஸ், பள்ளி முதல்வர் சேதுராமன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி