செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ‘ஒயிட்வாஷ்’ ஆனது இங்கிலாந்து…

‘ஒயிட்வாஷ்’ ஆனது இங்கிலாந்து…

‘ஒயிட்வாஷ்’ ஆனது இங்கிலாந்து… post thumbnail image
சிட்னி:-ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஷ் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடர் சிட்னியில் நடைபெற்றது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 155 ரன்னில் சுருண்டது.

171 ரன்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2–வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து இருந்தது. ரோஜர்ஸ் 73 ரன்னும், பெய்லி 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.இன்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. ரோஜர்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 119 ரன்கள் எடுத்து அவர் ஆட்டம் இழந்தார். இந்த தொடரில் அவர் அடித்த 2–வது செஞ்சூரியாகும். மெல்போர்ன் டெஸ்டில் 116 ரன் எடுத்து இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி 276 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ரோஜர்சுக்கு அடுத்தப்படுடியாக பெய்லி 46 ரன் எடுத்தார். போர்த்விக் 3 விக்கெட்டும், ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் பிராட் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.448 ரன் என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து 2–வது இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 166 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா அணி 281 ரன்னில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் 3 நாளிலேயே முடிந்து விட்டது.
இந்திய வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5-0 என இங்கிலாந்து அணியை ‘ஒயிட்வாஷ்’ செய்யதது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி