திரையுலகம் பணத்தை விட நல்ல கதையை விரும்பும் பசுபதி…

பணத்தை விட நல்ல கதையை விரும்பும் பசுபதி…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

நீண்ட காலமாக படங்களையே ஒப்புக்கொள்ளாமல் இருந்த பசுபதி தற்போது ‘அரவான்’ படத்தில் மட்டும்தான் நடித்து வருகிறார்.
ஒரு நடிகராக எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று நினைப்பவர் பசுபதி. இவரை சந்தித்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கதை சொல்லியும் மன்னிக்கணும்.

உங்க கதை எனக்குப் பிடிக்கலை என்று முகத்திற்கு நேரே சொல்லியனுப்பிவிடுகிற பசுபதி, இதற்காகவெல்லாம் வருத்தப்படுவதே இல்லையாம். இதனால் கோடம்பாக்கத்தில் இவர் மீதுள்ள வருத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

‘அரவான்’ வந்தபின் எனக்கு இன்னும் பெரிய பேர் கிடைக்கும். நல்ல வேடங்களும் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் அவர்.

ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியவே இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்கிறது நிஜ நிலவரம். அப்புறம் போஸ்ட் புரொடக்ஷன் அது இது என்று கணக்கிட்டால் இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் பசுபதியை பார்க்க.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.