திரையுலகம் மாளவிகாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ்…

மாளவிகாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

நிலா`, `சந்திரலேகா` உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர். நம்பி, “என்னைத் தொடு` என்ற படத்தை இயக்குகிறார். ரோஹன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக பவித்ரா அறிமுகமாகிறார். “சினிமா இயக்கத்தில் கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது. இப்போது “காலபைரவி`, “பொறுத்திரு` ஆகிய படங்களுடன் “என்னைத் தொடு` படத்தையும் இயக்கி வருகிறேன். படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று படங்களும் வெவ்வேறு கதைகளை கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

“பொறுத்திரு` படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டது. திருமணத்துக்குப் பின் மாளவிகா இந்தப் படத்தில் நடிகையாகவே நடிக்கிறார். காலபைரவி வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்டது“ என்றார் எம்.ஜி.ஆர்.நம்பி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி