திரையுலகம் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சுல்தான் தி வாரியர்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சுல்தான் தி வாரியர்

sultan the warrior

ரஜினி காந்த் ஸ்டைலில் அனிமேசன் படமாக உருவாகிவரும் சுல்தான் தி வாரியரின் நீண்டகால சிக்கலுக்கு தீர்வு கிடைக்கப்போகிறது. சௌந்தர்யா ரஜினி காந்த் தானே தயாரித்து இயக்கிவந்த ‘சுல்தான் தி வாரியர்’ சிலபல காரணங்களால் முடிவடையாமல் உள்ளது.

சௌந்தயாவின் திருமணத்திற்கு பிறகு இந்தப் படத்தை வாங்கியுள்ளதாக கூறப்படும் ஜெமினி லேப் சௌந்தர்யாவுக்கு பதிலாக கே.எஸ்.ரவிக்குமாரை இயக்க வைக்க முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா வட்டாரத்தின் இப்போதைய பரபரப்பான செய்தியே ஜெமினி லேப்பின் இந்த அதிரடி மாற்றம்தான்.

சௌந்தயா இதுவரை எடுத்திருந்த அனிமேஷன் காட்கிகளை அப்படியே பயன்படுத்திக் கொண்டு, அதில் ரஜினியை வைத்து தனது பாணியில் எடுக்கப் போகிறாராம் ரவிக்குமார்.

எந்திரன் தந்த மகிழ்ச்சியுடன் ரஜினி தொடங்கியிருக்கும் இமயமலை பயணம் முடிந்து, அவர் சென்னைக்கு திரும்பியதும் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி