March 16, 2019

அரசியல், முதன்மை செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ள நிலையில் , அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் ,சாலிகிராமம் சென்று கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் சந்தித்து பேசினார். இரு சந்திப்புகளும் மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்த பிறகு ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் என்கிற முறையில் விஜய காந்தை சந்திக்க வந்தேன். அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்த போது தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன்.அவர் உடல் நலத்துடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் கூட்டணியின் வெற்றியாக அமையும். த.மா.கா. வின் தேர்தல் அறிக்கை வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சங்ககாலம், முதன்மை செய்திகள்

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன். ஆலவாய் பெருமான்-சிவன். குன்று எறிந்த வேள்-முருகன். துவரைக்கோமான்-கண்ணன். நிதியின் கிழவன்-குபேரன். மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர். மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள். மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர். காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம். வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம். இடை, கடைச் சங்கத்திற்கு உருய மன்னன்-முடத்திருமாறன். முச்சங்கத்திற்கும் உரிய நூல்-அகத்தியம். முத்தமிழ் இலக்கண நூல்-அகத்தியம். இயற்றமிழ் இலக்கண நூல்-தொல்காப்பியம். இசைத்தமிழ் இலக்கண நூல்-முதுநாரை. நாடகத்தமிழ் இலக்கண நூல்- இந்திரகாளியம்,பஞ்சமரபு. புலவர் தலைவர் அகத்தியர். அகத்தியர் மாணவர் 12 பேர். தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார்,காக்கை பாடினியார்,நத்தத்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அகத்தியரின் மாணவர்கள் 12 பேரும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம். இது ஒரு புற நூல். அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம். இது 12000 நூற்பாக்களைக் கொண்டது.தற்போது 103 நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இது 12 பகுதிகளை உடையது.அவை எழுத்து, சொல், பொருள்,யாப்பு , சந்தம். வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், ஜோதிடவியல், கந்தர்வம், கூத்து. “எள்ளின் நின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தின்றும் எடுபடும் இலக்கணம்” என்பது அகத்திய நூற்பா.

திரையுலகம், முதன்மை செய்திகள்

பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?….

நடிகர் விஷாலுக்கு இன்று(மார்ச்-16) நிச்சயதார்த்தம்! நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இதனை தெரிவித்துஇருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். இவர்களது நிச்சயதார்த்தம் இன்று (16-ந்தேதி) ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லிசூப்லு, அர்ஜூன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகே திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார்.தற்போது கட்டிட பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை இன்று முடிவு செய்கிறார்கள். விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் , தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.2004-ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.கடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்றார் .ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடியானது.தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?

சேகுவாரா!!! உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும் , அது ஏன்?எதற்கு?எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது. அப்படியான ஒரு உருவம்தான் ,முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு ,சிகார் சகிதமாக ,கம்பீரமான ஆளூமையாக ,டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான். கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர் புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன். சேகுவாரா யார்? ஏழைகளை அன்போடு அரவணைப்பவர் . ஒரு சோசலிசப் புரட்சியாளர் ,மருத்துவர், அரசியல்வாதி. மேலும் , கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்கு பெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். சேகுவாரா என்றால் விடுதலை ,ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும். சேகுவாரா எனகிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்திற்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி ஆவார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில் கியூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சேகுவாரா நின்று இருந்தார். அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியாகவும் இருந்தார்.ஆனால், மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது. அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியதுதான் அதோடு கார்ல் மார்க்கசையும் , லெனினையும் உள்வாங்கி படித்த அவர் ஏழைகளும் , பாட்டாளிகளும் படும் துன்பங்களை அறிந்த போதுதான் போராளியானார். தொடரும்……..

தமிழ்ப்பேழை, முதன்மை செய்திகள்

தென்னாட்டின் மொழியினம் பாகம்-5

துளு: இதற்குக் கிரந்தத்தை ஒட்டிய எழுத்து முறை உண்டு .தனி இலக்கிய வளம் இல்லை.கிறித்துவப் பாதிரிமார்கள் முதன் முதலில் இம்மொழியில் நூல்கள் எழுதினர் .ஆனால் இவை கன்னட எழுத்துக்களில் எழுதி அச்சிடப்பெற்றன. கருநாடக மாநிலத்தை அடுத்துள்ள கல்யாணபுரி, சந்திரகிரி என்னும் இரண்டு ஆறுகளுக்கிடையேயுள்ள பகுதியில் வாழும் மக்கள் இம்மொழி பேசுகின்றனர். பிரிகெல் என்னும் ஐரோப்பிய அறிஞர் முதன் முதலாக இம்மொழிக்கு இலக்கணம் எழுதினார். குடகு: இம்மொழிக்கும் எழுத்தும் இலக்கிய வளமும் இல்லை. கன்னட மொழி பேசும் பகுதியை அடுத்துள்ள போதிலும் தமிழோடும் மலையாளத்தோடும் உறவு உடையதாக விளங்குவதாக டாக்டர் மோக்லிங் என்ற ஜெர்மனி அறிஞர் கூறுகிறார் .இது பழங்கன்னடத்திற்கும் துளுவிற்கும் இடைப்பட்டது என்பது கால்டுவெல் கருத்து. மேஜர் கோல் என்பவர் இதன் இலக்கணத்தையும் சில பாட்டுக்களையும் எழுதி வெளியிட்டு உள்ளார். கோத மொழி: நாகரிகத்தில் பின் தங்கியுள்ள நீலகிரியில் வாழும் மக்களே இம்மொழியைப் பேசுகின்றனர். தோத மொழி: நீலகிரிமலையில் வாழும் பழங்குடி மொழி இது. இம்மொழி பேசும் மக்கள் நாகரிகத்தில் பின் தங்கியவர்கள். இம்மொழி பேசுவோர் தொகை மிகவும் குறைவு. படக மொழி: இம்மொழி கன்னடத்தின் கொச்சைக் கிளை மொழி போன்றது.நீலகிரி மலையில் வாழ்வோர் பேசுவது. கோந்தி மொழி: மத்திய இந்தியாவில் சில மலைகளிலும் காடுகளிலும் வாழும் மக்கள் பேசும் மொழி. கூ,குவி,கோண்ட்: ஒரிசாவின் குன்றுகளில் வாழும் மக்கள் பேசும் மொழி. தொடரும்………..

Scroll to Top