செய்திகள்,பரபரப்பு செய்திகள் கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !!

கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !!

கருணாநிதி மீதிருந்த வழக்குகள் வாபஸ் !! post thumbnail image

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ,அவருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் பேசுபவர்கள் மீது சரமாரியாக அவதூறு வழக்குகள் பதியப்பட்டு வந்தன.

அதில் கருணாநிதியும் தப்பவில்லை.அவர் மீதும் அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தார் ஜெ.

அதன்படி , கடந்த 2012ஆம் ஆண்டு 7 வழக்குகளையும், 2013-ம் ஆண்டு 5 வழக்குகளையும், 2015-ம் ஆண்டு ஒரு வழக்கும் என மொத்தமாக 13 அவதூறு வழக்குகளை தொடுத்தது அதிமுக அரசு .

இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.இவ்வழக்குகள் அனைத்தும் இவ்வளவு நாட்களாக நிலுவையில் இருந்தன.

கருணாநிதி இறந்துவிட்டதால் இந்த வழக்குககளை ரத்து செய்யவேண்டும் என்று என தி.மு.க. வக்கீல் குமரேசன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கருணாநிதி மீதுள்ள 13 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி