செய்திகள் இறந்து விட்டதாக கூறப்பட்ட மகளுடன் 49 வருடங்களுக்கு பின் சேர்ந்த தாய்!…

இறந்து விட்டதாக கூறப்பட்ட மகளுடன் 49 வருடங்களுக்கு பின் சேர்ந்த தாய்!…

இறந்து விட்டதாக கூறப்பட்ட மகளுடன் 49 வருடங்களுக்கு பின் சேர்ந்த தாய்!… post thumbnail image
மிசௌரி:-கடந்த 49 வருடங்களுக்கு முன் மிசௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் செல்லா ஜாக்சன் பிரைஸ் என்ற பெண்மணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரைசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். வேறொரு குடும்பம் பிரைசின் பெண் குழந்தையை தத்தெடுத்து சென்று வளர்த்து வந்தது.

சில வருடங்களுக்கு பின், தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என்று தெரிந்து கொண்ட பிரைசின் பெண் மெலானி டயானே கில்மோரே, தனது தாயை தேடியவாறு இருந்தார். மெலானிக்கு திருமணமும் ஆகி 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும், அவரால் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மெலானியின் குழந்தைகள் படு சுட்டியாக இருந்தனர். அவர்கள் தங்கள் பாட்டியை பற்றி தெரிந்து கொள்ள சமூக வலைதளம் மூலம் முயன்று வந்தனர்.

அப்போது தான் பிரைசின் டி.என்.ஏ. மூலம், அவர் தான் தங்களது பாட்டி என்று பேரக்குழந்தைகள் இருவரும் கண்டுபிடித்தனர். தங்கள் தாய் மெலானியை, அவரது தாய் பிரைசுடன் சேர்த்து வைத்தனர். தனது மகளுடன் சேர்ந்தது குறித்து பிரைஸ் கூறுகையில், இதை விட மிகப்பெரிய அதிசயம் வேறு எதுவும் இல்லை. சாத்தான் என்னிடம் பறித்து சென்றதை, கடவுள் என்னிடம் திருப்பி தந்துள்ளார் என மகிழ்ச்சி பொங்க கூறினார். தாயுடன் சேர்ந்தது குறித்து மெலானி கூறுகையில், தாயுடன் சேரவேண்டும் என்ற எனது ஏக்கத்தை புரிந்து கொண்ட 2 குழந்தைகளும், இண்டர்நெட் மூலம் அவரை என்னுடன் சேர்த்துவைத்தனர் என பெருமை பொங்க கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி