செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகை சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு!…

நடிகை சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு!…

நடிகை சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு!… post thumbnail image
மும்பை:-பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர். சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவருக்கு, சன்னி லியோன் மேலாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடு்த்திருந்தார், அந்த போட்டோ, பின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்த போட்டோ, மக்காவ் தீவில் எடுக்கப்பட்டதாகவும், வைர வியாபாரிகள் தங்களது வர்த்தக விளம்பரத்திற்காக, அந்த போட்டோவை பயன்படுத்தியிருந்தனர்.

இதுதொடர்பாக, சன்னி லியோன் மீது சூரத் போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். சன்னி லியோன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிக்காக, சூரத் சென்றிருந்த சன்னி லியோன், கடைசி நேரத்தில், நிகழ்ச்சியின் இடத்தை மாற்றியதில், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி