ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் ஐ.எஸ்., அல்-கெய்தா தீவிரவாத அமைப்புகளில் இணைந்து போரிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தானில் 6500 வெளிநாட்டினர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக துனிசியா, மொரோக்கோ, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா, மாலைதீவு, பின்லாந்து மற்றும் டிரினிடாட் & டொபாகோ போன்ற நாடுகளில் இருந்து தீவிரவாத இயக்கங்களில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு பயிற்சி அளித்து வெளிநாடுகளின் உணவகங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இதை தடுக்காவிட்டால் வருங்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த ஆணையம் எச்சரித்துள்ளது.
தீவிரவாத அமைப்புகளில் சேர்பவர்களின் பற்றி 10 சதவிதம் தகவல்கள் மட்டுமே உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். அந்த தகவல்களை அனைத்து நாடுகளும் தங்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். தற்போது துருக்கி ‘வாச் லிஸ்ட்’ என்ற பெயரில் 12500 பேரின் தகவல்களை வெளியிட்டு இருப்பதையும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி