செய்திகள்,திரையுலகம் இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…

இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…

இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவ்வருடம் தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. நாளை வெளியாக போகும் நண்பேன்டா படத்திலிருந்து அவருடைய இந்த ஆண்டு படங்களின் வெளியீடு ஆரம்பமாக உள்ளது. அடுத்து மே 1ம் தேதி மாஸ் படமும், மே 15ம் தேதி மாயா படம், ஜுன் 1ல் இது நம்ம ஆளு, ஜுன் 15ல் தனியொருவன், ஜுலை 15 நானும் ரௌடிதான் ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்திருக்கும் பாஸ்கர் த ராஸ்கல் படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்த படங்கள் ஆகும். இப்படங்கள் அனைத்தும் ஹிட் லிஸ்டில் அமைந்தால், இவ்வருடத்தின் அசைக்க முடியாத நாயகியாக நயன்தாரா இருப்பார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி