இதையடுத்து எதிர்காலத்தில் ஏல முறையினை பின்பற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தொலைத் தொடர்பு சேவையில் ஏல முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், மொபைல் போன்கள் சேவைக்கான 2-ஜி, மற்றும் 3-ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் 2015-16-ம் ஆண்டிற்கான உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் பங்கேற்றன.
19 நாட்களாக நடந்த ஏலம் நிறைவு பெற்றது. மொத்தம் 115 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஏலத்தின் முடிவில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 874 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்த பிறகே, ஏலம் எடுத்த நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அவற்றுக்கான அலைக்கற்றைகள் விவரம் வெளியிடப்படும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி