இவர்களில் அமெரிக்கா புளோரிடா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தரஞ்ஜித் சிங் பாட்டியா (29), துபாயில் வசிக்கும் ரித்திசாகிங் (29), கேரளாவை சேர்ந்த சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்களும் அடங்குவர்.செவ்வாய் கிரகத்துக்கு முதலாவதாக 4 பேரை வருகிற 2024–ம் ஆண்டில் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆள் அனுப்புவதில் 2 ஆண்டுகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2026–ம் ஆண்டு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் 2027–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவார்கள்.
பயண தாமதத்துக்கு பண முதலீடு பற்றாக்குறையே முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்கான பணியும் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாஸ் லேண்ட்ஸ்ட்ராப் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆள் இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் பணி 2018–ம் ஆண்டு தொடங்குவதாக இருந்தது. தற்போது அதுவும் 2 ஆண்டு காலதாமதப்படுத்தப்பட்டு 2020–ம் ஆண்டு தொடங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி