ரேபரேலி மாவட்டம் பச்ராவன் என்ற இடத்தில் வந்த போது திடீர் என்று ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பயணிகள் பலியானார்கள். தகவல் கிடைத்ததும் ரெயில்வே மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
25 பேர் வரை காயம் அடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்னலுக்காக ரெயிலை டிரைவர் நிறுத்த முயன்ற போது பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து காரணமாக ரேபரேலி வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு மாற்று பாதையில் விடப்பட்டன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி