இன்று படமாக்கப்பட்ட ஆக்ரோஷமான, அதிரடியான சண்டைக்காட்சியின் போது சசிகுமார் சற்றும் எதிர்பாராவண்ணம் விபத்துக்குள்ளானார். இதனால் அவரது இடது கை எலும்பு முறிந்தது.
உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் சசிக்குமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.
சிறிது காலம் ஒய்வெடுக்கும்படி மருத்துவர்கள் சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். சசிக்குமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர். சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி