செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சங்ககரா!…

தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சங்ககரா!…

தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சங்ககரா!… post thumbnail image
சிட்னி:-இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சங்ககரா தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் எந்த ஒரு வீரரும் இதற்குமுன் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தது கிடையாது.

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 107 பந்தில் 11 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்தார். இதற்கு முன் இங்கிலாந்திற்கு எதிராக கடந்த மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற போட்டியில் 86 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதில் இலங்கை அணி 309 ரன்களை சேசிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிப்ரவரி 26-ந்தேதி வங்காள தேசத்திற்கு எதிரான நடைபெற்ற போட்டியில் 76 பந்தில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தார். இதில் இலங்கை அணி 332 ரன்கள் குவித்து வங்காள தேசத்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சங்ககரா சதம் அடித்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி