அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!…

முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!…

முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!… post thumbnail image
லக்னோ:-சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான முலாயம் சிங் யாதவிற்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் டெல்லி அருகில் இருக்கும் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் ஊடக தொடர்பாளர் ராஜேந்திர சௌத்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளார்கள். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி