அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ராகுல்காந்தியை காணவில்லை-கண்டுபிடித்தால் பரிசு – பரபரப்பு போஸ்டர்!…

ராகுல்காந்தியை காணவில்லை-கண்டுபிடித்தால் பரிசு – பரபரப்பு போஸ்டர்!…

ராகுல்காந்தியை காணவில்லை-கண்டுபிடித்தால் பரிசு – பரபரப்பு போஸ்டர்!… post thumbnail image
அலகாபாத்:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தற்காலிக விடுமுறை எடுத்துள்ளார். ராகுல்காந்தியின் அரசியல் விடுமுறை குறித்து மற்ற கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அந்த கட்சியிலும் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி டெல்லியில் இல்லை. வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என்றும், வேறு மாநிலத்தில் இருக்கிறார் என்றும் செய்திகளும், படங்களும் வெளியாகி வருகின்றன.

காங்கிரஸ் தரப்பில், ராகுல் விரைவில் வருவார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்பார். அதன் பிறகு கட்சியில் அதிரடி மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் உ.பி. மாநில காங்கிரஸ் முன்னாள் பிரமுகரும், சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தவருமான அமர்வைய்யா என்பவர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் ஒட்டியுள்ள போஸ்டரில் ‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமறைவு. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அலகாபாத் நகரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி