காங்கிரஸ் தரப்பில், ராகுல் விரைவில் வருவார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்பார். அதன் பிறகு கட்சியில் அதிரடி மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் உ.பி. மாநில காங்கிரஸ் முன்னாள் பிரமுகரும், சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தவருமான அமர்வைய்யா என்பவர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் ஒட்டியுள்ள போஸ்டரில் ‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமறைவு. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அலகாபாத் நகரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி