செய்திகள் ரெயில்களில் விரும்பிய ஓட்டல் சாப்பாடு இனி பயணிகளுக்கு கிடைக்கும்!…

ரெயில்களில் விரும்பிய ஓட்டல் சாப்பாடு இனி பயணிகளுக்கு கிடைக்கும்!…

ரெயில்களில் விரும்பிய ஓட்டல் சாப்பாடு இனி பயணிகளுக்கு கிடைக்கும்!… post thumbnail image
புதுடெல்லி:-நாடு முழுவதும் 108 ரெயில்களில், பயணிகள் ஆன்லைன் வழியாக உணவுக்கு ஆர்டர் செய்து பெறும் வசதி, சோதனை ரீதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் உணவிலிருந்து பயணிகளுக்கு பிடித்தமான உணவுவரை தேர்வுசெய்து ஆர்டர் செய்கிற வசதி உள்ளது.

ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறபோதே, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திலேயே நீங்கள் விரும்புகிற உணவினை தேர்ந்தெடுத்து பதிவு செய்து விடலாம். இதற்கு கிடைக்கிற வரவேற்பைப் பொறுத்து, இந்த வசதி இன்னும் கூடுதலான ரெயில்களில் விஸ்தரிக்கப்படும் என்ற அறிவிப்பை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, நேற்று ரெயில்வே பட்ஜெட்டில் வெளியிட்டார்.

அந்தந்த பகுதிகளில் தரமான உணவினை வழங்கக்கூடிய பல்வேறு சிறந்த நிறுவனங்களை இதில் ஒன்றிணைக்கவும் ரெயில்வே முடிவு செய்துள்ளது. எனவே பயணிகள் விரும்புகிற உணவினை, பிடித்தமான ஓட்டல் தயாரிப்பில் முன்கூட்டியே ஆன்லைனில் ஆர்டர் செய்து, பயணத்தின்போது சுடச்சுட பெற்று சாப்பிட முடியும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி