செய்திகள்,திரையுலகம் விழிப்போடு இருக்கும் நடிகர் விஜய் – காரணம்!…

விழிப்போடு இருக்கும் நடிகர் விஜய் – காரணம்!…

விழிப்போடு இருக்கும் நடிகர் விஜய் – காரணம்!… post thumbnail image
சென்னை:-கடந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ‘இளையதளபதி’ நடிகர் விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக இரட்டை வேடம் போட்டது இப்படத்தில்தான். அதேபோல் இப்போது உருவாகி வரும் ‘புலி’ படத்தில் முதல்முறையாக 3 வேடம் போட்டு நடித்து வருகிறார் விஜய்.

மேலும் இளையதளபதி விஜய்க்கு விஷேசமாக ஒரு பழக்கம் உள்ளது. ஷூட்டிங் சமயத்திலும் சரி வெளி இடங்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கும் போதும் சரி ஒரு விஷயத்தை கடை பிடிப்பாராம். ஹோட்டலில் தனக்கு ஒதுக்கப்படும் அறையில் 10 நிமிடம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து ஏதாவது ஒரு தளத்தை குறிப்பிட்டு அங்கே இந்த ரூம் கொடுங்க என்று கேட்பது வழக்கம். அந்த ரூம் இல்லையென்றால் வேறு ரூம் கேட்டு மாறிவிடுவார். காரணம், தனக்காக முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட அறையில் ரகசிய கருவிகள் ஏதேனும் வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற முன்னெச்சரிக்கைதானாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி