செய்திகள்,திரையுலகம் என் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள் – நடிகர் சிம்பு அதிரடி!…

என் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள் – நடிகர் சிம்பு அதிரடி!…

என் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள் – நடிகர் சிம்பு அதிரடி!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்று தான் பொருள் போல, அந்த வகையில் என்னை அறிந்தால் படம் குறித்து இவர் போட்ட டுவிட் ஒன்று பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதற்கு விளக்கம் அளித்த இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் என்று கூறினேன், அதற்கு இவர்கள் என்னை திட்டுவது எந்த விதத்தில் நியாயம்.

அது என்னுடைய கருத்து சுதந்திரம், அதுமட்டுமில்லாமல், ஐ படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தார்கள், அதை கிண்டல் மற்றும் விமர்சனம் செய்வது தவறில்லை, ஆனால், மிகவும் கீழ்தரமான வார்த்தைகளில் பேசுவது தான் கோபத்தை வரவைக்கிறது.

லிங்குசாமியை எல்லோரும் கிண்டல் செய்தார்கள், அப்போது நான் ஏதும் கூறினேனா?, அதேபோல் தற்போது என் கருத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, நான் அதை பொதுவாக தான் கூறினேன் என்று தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி