அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பா.ஜ.க. 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளது.

அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது டெல்லி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று மோடி உறுதியளித்தார். பதிலுக்கு கெஜ்ரிவாலும் டெல்லி வளர்ச்சியடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி