செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்!…

ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்!…

ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்!… post thumbnail image
லண்டன்:-உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தினமும் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் பொதுமக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்ளியா ரஸ்கின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் க்ரீன் டீ பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

14 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு கிரீன் டீயில் உள்ள ஈ.ஜி.சி.ஜி. அடங்கிய கேப்சூலும் மற்றொரு குழுவிற்கு மருந்து இல்லாத கேப்சூலும் கொடுக்கப்பட்டது. இதில் மாத்திரை எடுக்காதவர்களோடு ஒப்பிடும் போது மாத்திரை எடுத்தவர்களுக்கு 1.63 சதவீதம் உடல் எடை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தினசரி சோதனையில் கொடுக்கப்பட்ட கேப்சூலில் இருந்த ஈ.ஜி.சி.ஜி.யின் அளவு 400 மில்லி கிராம். இதே அளவை தினசரி பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு ஏழு முறை காஃபின் நீக்கப்பட்ட க்ரீன் டீ அருந்த வேண்டும் என்றும் இவ்வாறு எடுத்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமின்றி உடலில் செயலாற்றலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி