செய்திகள் மருத்துவ ஆய்வு என்ற போர்வையில் 100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த ஆசாமி!…

மருத்துவ ஆய்வு என்ற போர்வையில் 100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த ஆசாமி!…

மருத்துவ ஆய்வு என்ற போர்வையில் 100க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த ஆசாமி!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பானில் பல்வேறு கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய 54 வயதாகும் நொகுச்சி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரை விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ ஆய்விற்காக உறங்கும்போது இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதாக சொல்லி மருத்துவத்துறையில் ஆர்வமுள்ள பெண்களை ஹோட்டல் மற்றும் கடற்கரை விடுதிகளுக்கு அழைத்துச் சென்ற நொகுச்சி மயக்க மருந்து கொடுத்து அவர்களை கற்பழித்துள்ளான்.

மேலும் அந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து ஆபாச இணைய தளங்களுக்கு விற்று அதன் மூலமாக 85000 டாலருக்கும் (52 லட்சம் ரூபாய்) மேல் சம்பாதித்திருக்கிறான்.
கடந்த நவம்பர் 2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நொகுச்சியால் பாதிக்கப்பட்ட 14 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் இருக்கும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நொகுச்சிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி