செய்திகள்,விளையாட்டு 2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…

2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…

2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!… post thumbnail image
லண்டன்:-2016ம் ஆண்டிற்கான டி.20 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதே போல் 2021ம் ஆண்டிற்கான உலக கோப்பை டெஸ்ட் போட்டிகளும், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டு ஆண்டிற்கான டி.20 போட்டிகள் மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெறும் என தெரிவித்துள்ள ஐ.சி.சி., இவ்வாண்டு நடைபெறும் உலக கோப்பை ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டை ஏற்படுமானால் சூப்பர் ஓவரை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி