செய்திகள்,திரையுலகம் கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!…

கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!…

கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்யின் நடிப்பில் பல பிரச்சனைகளுக்கு பிறகு சென்ற வருடம் தீபாவளிக்கு அக்டோபர் 22ம் தேதி ரிலிஸ் ஆன திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தை முருகதாஸ் இயக்க, விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அனிருத் தன் இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். இப்படம் விஜய் கேரியரில் மிகவும் முக்கியமான படம் என்று கூட சொல்லலாம்.

இதில் இரட்டை வேடங்களில் ஜீவானந்தம், கதிரேசன் என கலக்கியிருப்பார். நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை மனதில் பதிய வைத்தது இந்த கத்தி. இதில் விஜய் பேசும் ஒவ்வொரு வசனமும் பணக்கார வர்க்கத்தினருக்கும், மல்டி நேஷ்னல் கம்பெனி முதலாளிகளுக்கு நெத்தியடி தான். இப்படம் இன்றுடன் 100 வது நாளை எட்டியுள்ளது. மேலும், சென்ற வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களில் கத்தி தான் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி