செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!…

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!…

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்: இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்பு!… post thumbnail image
ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர்.

இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் பலியானவர்களின் உடல்களையும், விமானத்தையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மேலும் 6 பயணிகளின் உடல்களை நீர்மூழ்கி வீரர்கள் மீட்டுள்ளனர். மீதமுள்ள பயணிகளின் உடல்கள் விமானத்தின் உடற்பகுதியில் இருக்குமென்று என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

கடந்த 24 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில், இதுவரை 59 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் வால் பகுதி உள்ளிட்ட சில பாகங்களும் கிடைத்துள்ளன. சமீபத்தில் கிடைத்த விமானத்தின் கருப்புப்பெட்டியின் ஒலிப்பதிவுக்கருவிகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி