செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஜெயசூர்யாவின் சாதனையை முந்தினார் சங்ககரா!…

ஜெயசூர்யாவின் சாதனையை முந்தினார் சங்ககரா!…

ஜெயசூர்யாவின் சாதனையை முந்தினார் சங்ககரா!… post thumbnail image
ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இலங்கை வீரராக ஜெயசூர்யா இருந்தார். 445 போட்டியில் ஆடி 13,430 ரன்னை எடுத்து இருந்தார். சங்ககரா அதை முறியடித்து அதிக ரன் எடுத்த இலங்கை வீரர் என்ற சாதனையை பெற்றார். நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் 76 ரன்கள் எடுத்தார். 17–வது ரன்னை தொட்டபோது ஜெயசூர்யாவை முந்தினார்.

சங்ககரா 394 ஒருநாள் போட்டியில் விளையாடி 13,490 ரன் எடுத்து உள்ளார். உலக அளவில் அவர் 3–வது இடத்தில் உள்ளார். தெண்டுல்கர் (இந்தியா) 18,426 ரன் எடுத்து முதல் இடத்திலும், பாண்டிங் 13,704 ரன்னுடன் 2–வது இடத்திலும் உள்ளனர். உலக கோப்பை போட்டியின்போது சங்ககரா 2–வது இடத்துக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி