செய்திகள்,விளையாட்டு ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ஆட்டத்தில் விளையாட தடை!…

ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ஆட்டத்தில் விளையாட தடை!…

ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஒரு ஆட்டத்தில் விளையாட தடை!… post thumbnail image
துபாய்:-ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெல்போர்னில் நேற்று முன்தினம் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணி பந்து வீசுகையில் கூடுதல் நேரத்தை எடுத்து கொண்டது.

வழக்கமான நேரத்துக்குள் தங்களது பந்து வீச்சை முடிக்காமல் 26 நிமிடங்கள் தாமதமாக பந்து வீசி முடித்தது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் காலதாமதமாக பந்து வீசியதால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமும், அணியின் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தகவல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி