செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 2014ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!…

2014ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!…

2014ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!… post thumbnail image
ஜூரிச்:-சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான (2014) சிறந்த வீரருக்கான விருது சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் இன்று வழங்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்களின் பெயரை பிபா வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கோல்கீப்பராக ஜெர்மனியின் மானுயல் நியூர் தேர்வு செய்யப்பட்டள்ளார்.

தவிர, சிறந்த முன்கள வீரர்களாக அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, போர்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆர்கன் ராபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த தடுப்பு ஆட்டகாரர்களாக பிலிப் லாம், டேவிட் லூயிஸ், செர்ஜியோ ராமோஸ், தியாகோ சில்வா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நடுக்கள வீரர்களாக ஆண்டிரஸ் இனியஸ்தா, டோனி கிராஸ், ஏஞ்சல் டி மரியா ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

2014ன் சிறந்த கால்பந்து வீரர் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் மூன்றாவது முறையாக பெறுகிரார். இதற்கு முன் 2008, 2013 இல் இந்த விருதுகளை பெற்று உள்ளார். விருதை பெற்று கொண்டு பேசிய ரொனால்டோ எப்போதும் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக நிறைய முயற்சிகள் தேவைப்படுகிறது. நான் எனது தாயார் மற்றும் தந்தைக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.அவரக்ள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் அங்கு இருந்து என்னையும் எனது குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்கள். இந்த கோப்பை மிக முக்கியமானது.இது எனக்கு மறக்க முடியாத ஆண்டு இதன் முக்கியத்தும் கற்பனைக்கு எட்டாததாக உள்ளது. என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி