செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!…

ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!…

ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!… post thumbnail image
சானா:-அரேபிய தீபகற்ப பகுதியில், அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் உள்ள போலீஸ் கல்லூரி அருகே நேற்று பயங்கர கார் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.குண்டு வெடிப்பு காரணமாக சானா நகரம் முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பு எதுவும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் அல்கொய்தா தீவிரவாதிகளே இந்த கார் குண்டு வெடிப்பை நடத்தி இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி