செய்திகள்,திரையுலகம் விஜய் நடிக்கும் ‘புலி’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்!…

விஜய் நடிக்கும் ‘புலி’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்!…

விஜய் நடிக்கும் ‘புலி’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் அவர்களின் 58-வது படத்தை சிம்புதேவன் இயக்குகின்றார். இளைய தளபதி விஜய் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த கதாபாத்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இளையதளபதி நடித்து வரும் படத்தின் டைட்டில் (04-01-2015) அன்று 11 மணியளவில் விஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘புலி’ என்று பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

‘புலி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற இருக்கிறது. மைசூரில் மகாராஜா அரண்மனையை அடுத்து சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த இடம் லலிதா மஹால் என்ற பிரமாண்ட அரண்மனைதான். ‘புலி’ படத்தின் படப்பிடிப்பும் இந்த அரண்மனையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மன்னர் காலத்துக் கதையும் இடம்பெறும் இந்தப் படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை லலிதா மஹாலில் படமாக்க சிம்புதேவன் ஸ்பெஷல் அனுமதி பெற்றுள்ளார் என்றும், இம்மாதம் முழுக்க இங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அரண்மனையில் முதன்முதலாக சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த ‘வசந்த மாளிகை‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன்பின்னர் பல கோலிவுட், டோலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் இந்த அரண்மனையில் நடைபெற்றன. சமீபத்தில் ரிலீஸான ரஜினியின் ‘லிங்கா‘ படத்திலும் இந்த அரண்மனை இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் மைசூர் அரண்மனையில் இளையதளபதி ‘புலி’யாக வலம் வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி