செய்திகள்,தொழில்நுட்பம் ரூ. 3.8 லட்சம் விலையில் புதிய செல்போன் அறிமுகம்!…

ரூ. 3.8 லட்சம் விலையில் புதிய செல்போன் அறிமுகம்!…

ரூ. 3.8 லட்சம் விலையில் புதிய செல்போன் அறிமுகம்!… post thumbnail image
லாஸ்வேகாஸ்:-இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் தற்போது புதிய செல்போன் ஒன்றை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செல்போனின் விலை 6 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய பணத்தின் மதிப்பின்படி இதன் விலை ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

டோனியோ லம்போர்கினி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போனின் வெளிப்புறப்பகுதி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் தோல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 5 அங்குல எச்.டி. திரை கொண்டது. 20 மெகா பிக்சல் கேமராவும் இதில் உள்ளது. இந்த செல்போன் கையாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு, தங்க நிறம், வெள்ளி நிறம் என மொத்தம் 5 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

லம்போர்கினி நிறுவனம் ஆடம்பர செல்போன்களை மட்டுமே தயாரித்து வருகிறது. அந்த நிறுவனம் தயாரித்துள்ள விலை குறைந்த போன் டோனினோ லம்போர்கினி தான். இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளவற்றில் விலை குறைந்த போன் இது என்பதால் இதற்கான தேவை அதிகம் இருக்கும். எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த செல்போன்களை தயாரிக்க இந் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி