செய்திகள் காந்தி படத்துடன் பீர் டின்!…

காந்தி படத்துடன் பீர் டின்!…

காந்தி படத்துடன் பீர் டின்!… post thumbnail image
புதுடெல்லி:-அமெரிக்காவை சேர்ந்த ‘நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி’ என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் உலகம் முழுவதும் மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் காந்தி பெயரில் ஒரு வகை பீர் அறிமுகம் செய்துள்ளது. இந்த பீருக்கு பல நாடுகளில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் காந்தி பீர் டின்களை புதுமையான முறையில் வெளியிட்டுள்ளது. அந்த பீர் டின்னில் மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது.

மதுபான விற்பனைக்கு காந்திபடம் பயன்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.இந்நிலையில் ஆந்திர மாநிலம் நம்பள்ளி கோர்ட்டில் இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்கீல் ஜனார்த்தன கவுடா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அவர் தன் மனுவில், இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க மது நிறுவனம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளது. அவர்களது செயல் கண்டனத்துக்குரியது.

பீர் டின்னில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டதற்காக அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தேச கவுரவச் சட்டம் 1971 பிரிவு 124 (ஏ)யின்படி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி இருப்பதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாது. இவ்வாறு அவர் தன் மனுவில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி