செய்திகள்,முதன்மை செய்திகள் டெல்லியில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி, 0 பேர் படுகாயம்!…

டெல்லியில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி, 0 பேர் படுகாயம்!…

டெல்லியில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி, 0 பேர் படுகாயம்!… post thumbnail image
புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிம்லாவை விட டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இச்சூழ்நிலையில் அங்குள்ள யமுனா விரைவுச்சாலையில் ‘பெல்’ நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலருடன் இன்னோவா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

விரைவுச்சாலை என்பதால் அச்சாலையில் போகும் வாகனங்கள் வேகமாக செல்வது வழக்கம். அப்போது அதிகாரிகளை ஏற்றச்சென்ற இன்னோவா கார் திடீரென்று பேருந்து ஒன்றின் மீது திடீரென மோதியது. இதில் அந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் காரில் வந்த ‘பெல்’ நிறுவன பொது மேலாளர் ஆர்.என். சின்கா, அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான ஏ.கே. தாஸ், பிரதீப், சோப்னா பிங்கி ஆகியோர் படுகாயமடைந்தார். இந்த காருக்கு பின் வந்த டிரக் ஒன்று கவிழ்ந்திருந்த கார் மீது மோதியது. டிரக்குக்கு பின் அதிவேகத்தில் வந்த 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இந்த மோசமான விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆர்.என். சின்கா, தாஸ் மற்றும் மேலும் மூவரும் மரணத்தை தழுவினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோசமான விபத்து காரணமாக அந்த சாலையில் பிற்பகல் வரை போக்குவரத்து முடங்கியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி