செய்திகள் உ.பி.யில் துப்பாக்கி முனையில் மாணவி கடத்தி கற்பழிப்பு!…

உ.பி.யில் துப்பாக்கி முனையில் மாணவி கடத்தி கற்பழிப்பு!…

உ.பி.யில் துப்பாக்கி முனையில் மாணவி கடத்தி கற்பழிப்பு!… post thumbnail image
ரேபரேலி:-உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட கோட்வாலி பகுதியை சேர்ந்த 11–ம் வகுப்பு மாணவி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சென்றார்.அப்போது காரில் வந்த 4 வாலிபர்கள் மாணவி அருகே வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றனர். காரில் அந்த மாணவியை ஓட்டலுக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளனர். பின்னர் அந்த கும்பல் அவரது வீட்டு அருகே இறக்கி விட்டு சென்றது.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சுபேஷ் வர்மா, பால்போசிங், சூர்யகாந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
4–வது குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி