எனவே கத்தி திரைப்படத்தை வேறு எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும். தொலைக்காட்சியில் கத்தி திரைப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். கதையை திருடியதற்காக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுக்களை நீதிபதி முகமதுஅலி விசாரணை செய்து, கத்தி திரைப்படத்தை வேறு எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்ய தடைகோரும் மனு மீதான விசாரணையை அடுத்தமாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பாளர்களான சென்னை தி.நகரை சேர்ந்த கருணாகரன், சுபாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் நஷ்டஈடு வழங்கக்கோரும் மனு மீதான விசாரணையை அடுத்தமாதம் 23-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி முகமதுஅலி அன்றையதினம் கத்தி திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்வில்லியம் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி